Friday 1 May 2015

இனிய சிங்கள எதிரியே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
என்னை முடக்கிவிட்டதைக் கண்டு
என்கை கடிக்க வைத்ததைக் கண்டு
என்வயிறு கடிக்க வைத்ததைக் கண்டு
நடுவழியே ஒதுக்கி வைத்ததைக் கண்டு
சூடு வாங்கிக் கட்டிய உடலும்
கேடு எண்ணிப் புண்ணாகிய உள்ளமும்
பட்டதைக் கெட்டதைப் பாடச் சொல்லுதே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
என் உண்மைகளை அழித்ததை
என் வருவாயை உடைத்ததை
என் நம்பிக்கைகளை முறித்ததை
என் விரும்பிகளைப் பிரித்ததை
என் வாழ்க்கையைக் கெடுத்ததை
எண்ணி எண்ணி நொந்ததை
உள்ளத்தில் வலிப்பதைப் பாடச் சொல்லுதே!

பாடவா - நான்
உன்னைப் பாடவா - நீ
சுட்டுச் சென்ற சொல் கணைகள்
விட்டுச் சென்ற உடல் புண்கள்
பட்டுச் சென்ற உள்ளக் கீறல்கள்
தொட்டுச் செல்லும் காற்று உரச
முட்டி மோதும் எண்ணங்கள் - உன்னை
வெட்டு ஒன்று துண்டு இரண்டாக
வெட்டி விட்டாச்செனப் பாடச் சொல்லுதே!




6 comments:

  1. வணக்கம்
    அண்ணா.
    அருமையாக உள்ளது இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. ரசனையான வார்த்தைகள் அருமை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வலியின் வார்த்தைகள் கவிதையாய்...
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.