Saturday 9 August 2014

தண்ணீருக்கும் தமிழனுக்கும் போரா?

ஈழத்தில் புலிகள் அழிய
ஈழத்தில் தமிழர் நசுங்க
ஈழம் சிங்களவருடையதாக மாறிட
திருகோணமலை மாவிலாறு தண்ணீர் தான்
காரணமாயிற்றோ என்றால்
தொப்புள் கொடி உறவாம்
தமிழகத் தமிழரையும் பதம் பார்க்க
காவிரி ஆற்றுத் தண்ணீர் தான்
தலையிடி என்றால்
முல்லைப் பெரியாற்றுத் தண்ணீரும்
முரண்பட்டு நிற்க
பாலாற்றுத் தண்ணீரும்
பிரிந்து போக நினைக்கிறதே!
தொப்புள் கொடி உறவுகளே
தண்ணீரும் தேவை
இந்தியாவின் தலைநிமிர்வும் தேவை
ஆனாலும்
தமிழன் அழிவதற்கு இடமின்றி
தமிழ்நாடு மேன்மையுற
நல்ல தீர்வு ஒன்றைக் காணாவிட்டால்
தண்ணீருக்கும் தமிழனுக்கும் போர் தானே!

5 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    உண்மைதான் இதிலிருந்துதான் பெரிய பிரச்சினை உருவானது... தண்ணீருக்கு சண்டைவரும் நாடுகள் கவனமாக செயற்ப்பட வேண்டிய நிலை பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. வேண்டாட தண்ணீதான் இங்கே பெருக்கெடுத்து ஓடுது !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.