Tuesday 1 July 2014

நல்ல கணக்கு

அந்தி சாயும் நேரம் நம்மவர் நாட்டுநடப்புக் கூடிக் கதைக்குமிடத்தில் இப்படியொரு நாடகம் ஆடினாங்க.

முதலாம் ஆள் : காலம் கடந்து அறிவு(ஞானம்) வந்தென்ன பயன்?

இரண்டாம் ஆள் : இழப்புகளையும் சோர்வு(நட்டம்)களையும் கணக்கிடத்தான்...

மூன்றாம் ஆள் : அதுக்குத் தானண்ணே! காலம் கடந்தாலும் கணக்கு மட்டும் ஏறாதண்ணே!

நான்காம் ஆள் : எனக்கு ஏறிட்டுது அண்ணே!

மூன்றாம் ஆள் : எப்படி ஏறிட்டுது?

நான்காம் ஆள் : வைப்பகத்தில (வங்கியில்) நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் (சீரியல்) பார்த்த மனைவியின் சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தோமல்லோ!

முதலாம் ஆள் : அப்படி என்ன தான் படித்தீர்கள்?

நான்காம் ஆள் : நகை அடைவு வைத்துத் தொலைக்காட்சி வாங்கித் தொடர் பார்க்கக் கூடாது என்று தானண்ணே!

இரண்டாம் ஆள் : சங்கிலி கூறுவிலையில் (ஏலத்தில்) பறிபோன பின் படித்தென்ன பயன்!

முதலாம் ஆள் : வள்ளுவரின் வழிகாட்டலைப் படியுங்க...

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

(பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகை
குறள்:467)

2 comments:

  1. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.