Tuesday 24 June 2014

பாடமடி/பாடமடா


முன்மாதிரிகளைப் பார்த்து
நாம் வாழத்தானே
வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்கள் தானே
பாடமடி/பாடமடா!
முன்னே போய்
வீழ்ந்தவனைப் பார்த்துத்தானே
முன்னேற முடியும்!
எவரெவரோ
எதையெதைச் சொன்னாலும்
நல்லதைக் காதில் போட்டால் தானே
குறிக்கோளை அடைய முடியும்!
குறிக்கோளை அடையும் போதே
உள்ளம் நிறைய
மகிழ்ச்சி பொங்குகிறதே!
சுட்ட பின்னே அறிகிறோம்
சுட்டது நெருப்பென்று
பட்ட பின்னே அறிகிறோம்
கெட்டது நாமென்று
எப்படிப்பட்டாலும்
வாழ்பவர்களுக்கு
வாழ்ந்தவர்கள் தானே
பாடமடி/பாடமடா!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.