Monday 26 May 2014

புரிதல் வேண்டும்

நினைக்கிற நினைப்பில
கிடக்கிற பழசுகள்
உள்ளத்தைப் புண்படுத்துமே தவிர
இனிதாக எதனையும்
உன்னில் ஏற்படுத்தாதே!
படிக்கிற படிப்பில
பார்க்கின்ற பார்வையிலே
நுகருகிற அறிவில
புரிகிற உணர்வில
உன்னிலே தெளிவு வந்திடுமே!
பின்விளைவைக் கற்றிடு
பக்கவிளைவைக் அறிந்திடு
நேர்விளைவில் கண்டிருப்பாய்
பகுத்தறிவு இதுதானென்று!
உலகமே உனக்கொரு தூசு
பின்னைப் பொன்னெனப் பகுத்தறி
முன்னைக் கொஞ்சமாயினும் மறந்திடு
இன்றே தென்படும் உனது வெற்றி!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.