Tuesday 8 April 2014

அரசே! மின்வெட்டு வேண்டாமப்பா!

பள்ளியில் பணிகளும் தொடரவே தொடங்க
பிள்ளையே படிக்கவே தொடங்கிற நேரமாக
நிறுவனப் பணிகளும் தொடங்கிற வேளையிலே
தொட்டேனே கணினியை நிகழ்நிரல் எழுதவே
தொட்டவர் கருவியைத் தலைமுடி குறைத்திட
மரவரி தொழிலாளி அரியவே தொடங்க
மருத்துவர் எடுத்தார் கத்தியை அறையிலே
அவளைய் வெட்டியே குழந்தையே வெளியேற
உழவனே வயலில் நீர்விடத் தொடங்க
தண்ணீர் பாய்ச்சிற கருவியை அழுத்திட
எட்டைத் தாண்டிய காலைவேளை எவரும்
எடுத்தது தொடுத்தது முழுக்கவே நிறுத்திட
நமக்கு மின்தடை எரிச்சலைத் தருமே!
பாருங்களேன் அரசுமே பாராமலே இருந்திட
நம்மாளு படுகிற நெருக்கடி தீருமோ?
மின்தடை வரும்வேளை பெருகிற எரிச்சலே
நமக்கு உள்ளேயே மோதலைத் தூண்டுதே...
ஐயையோ! ஆட்சியை நடத்துவோர் அறியணும்
மக்களே கிளர்ந்தெழ அரசாள முடியுமோ
மின்தடை தொடருற அரசே!

2 comments:

  1. மீண்டும் சிறுக சிறுக ஆரம்பித்து விட்டது மின் வெட்டு...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.