Tuesday 18 March 2014

பசித்தவரெல்லாம் சாப்பிட வரலாம்

சாப்பாட்டுக் கடையில குந்தினால் மூக்குமுட்ட விழுங்குவாங்க... கடைசியில காசைக் கொடு என்றால் முழி பிதுங்கத் திண்டாடுவாங்க... அப்படியொரு நிகழ்வைக் கீழே பார்க்கலாம்.

கடைக் காசாளர் : மசாலா தோசை, பால் எல்லாம் சேர்த்து நூறு உரூபா கொடுங்களேன்.

உண்டு களைத்தவர் : பசிக்குச் சாப்பாடு கேட்டேன். எல்லாம் முடிந்ததும் காசை வையென்று கழுத்தை நெரிக்கலாமா?

கடைக் காசாளர் : அங்கே பார்...
"பசித்தவரெல்லாம் சாப்பிட வரலாம்
சாப்பிட்டோர் எல்லோரும்
பணம் கட்டாட்டி
பத்துப் படி உழுந்தாட்டணும்" என்று தானே இருக்கு!

உண்டு களைத்தவர் : உண்டதை வாந்தியாகவோ பேதியாகவோ எடுத்துத் தர முடியாமையால், பாதிப் படி உழுந்தாட்டுறேனுங்க...

கடைக் காசாளர் : இனியென்ன... உழுந்தாட்டித் தான் ஆகணுமே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.