Sunday 2 March 2014

பொய்கள் தேவை


காதலிக்க விரும்புகிறேன் என
கண்ணகியிடம் சொல்ல முனைந்தால்
கண்ணகியாள் கேட்கிற கேள்விகளுக்கு
பொய் சொல்லத் தெரியாமலே
காதலிக்காமலே தோல்வியுற்றேனே!
மணமுடிக்க விரும்புகிறேன் என
மாங்கனியிடம் சொல்ல முனைந்தால்
மாங்கனியாள் கேட்கிற கேள்விகளுக்கு
பொய் சொல்லத் தெரியாமலே
நோகாமல் பின்வாங்கி விட்டேன்!
கையிலே மாற்று மோதிரம்
கழுத்திலே மாமனார் போட்ட சங்கிலி
உந்துருளியில் தெருவழியே போகையிலே
என் பின்னாடி அடிக்கடி வருவாள்
என் சத்தியபாமா என்னும் இல்லாள்
இதெல்லாம் பார்க்காமல்
கண்ணகியும் மாங்கனியும் இருப்பார்களா?
இல்லாள் இருக்க
இன்னொருத்தியைக் காதலிக்கவோ
இன்னொருத்தியை மணமுடிக்கவோ
எனக்கோ
பொய்கள் தேவை
ஆனால்
சின்னத்திரை, பெரியதிரையைப் பார்த்து
எத்தனையோ கோடி பொய் சொல்லி
நாட்டில எத்தனையோ கேடு நிகழ்கிறதே!

6 comments:

  1. சின்னத் திரை ,பெரியத் திரைகள் எல்லாம் பொய் திரைகள் தானே ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete
  2. எல்லோருக்கும் பொய்கள் தேவைப்படுகின்றன ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாயினும்
    அருமை
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  3. இன்றைய பெரிய திரையாலும் கேடு தான்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.