Thursday 13 February 2014

வலன்டைன் (காதலர்) நாள்


சுவாமி வலன்டைன் அவர்களே!
ஆமாம்
கத்தோலிக்க மதகுருவே
போரில் பங்கெடுத்துச் சாவதைத் தடுக்க
இளசுகளை இணைத்து
மணமுடித்து வைத்ததால் சிறை சென்றீர்...
நீர்
சாவைத் தழுவிய நாளை
காதலர் நாள் என்றால்
எல்லோரும் ஏற்கலாம் தான்
ஆனால்
காதலர் நாள் என்று சொல்லி
வலன்டைன் குடிதண்ணி (விஸ்கி) குடிப்பதை
என்னால்
ஏற்க முடியவில்லையே!
காதலர் நாளில்
அடுக்கு ரோசாப் பூவை வழங்கி
காதலை வெளிப்படுத்துவதை
வரவேற்கிறேன் வலன்டைன் சுவாமி
ஆனால்
ஆண்டுக்கொரு ஆளிடம் அப்படிச் செய்வதை
ஏற்க முடியவில்லையே!
போன காதலர் நாளில்
காதலை வெளிப்படுத்திய பின்
இந்தக் காதலர் நாளில்
வரவேற்பு அட்டை நீட்டி
பெற்றோர் பேசி வைத்தவரோடு
மணநாள் என்றொரு குண்டைப் போட்டு
சாகடிப்பதைத் தானே
ஏற்க முடியவில்லையே வலன்டைன் சுவாமி!

5 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    அன்பு தினம் என்றும் வேண்டும்...
    தினம் என்றும் அன்பாக வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

      Delete
  2. அன்னைக்கு காதல் அப்படி ,இன்னைக்கு காதல் இப்படியா ?

    ReplyDelete
    Replies
    1. காலம் மாறிப்போச்சு ஐயா!

      Delete
  3. உண்மைக் காதல் என்றும் மாறாது!

    ReplyDelete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.