Monday 13 January 2014

பொங்கலுக்கு முதல் நாள்


தெருவெங்கும் வணிகம் சூடுபிடித்திருக்க
பொங்கலுக்கு வெல்லம், பழம் வேண்ட
நானும் நடைபோட்டேன்!
ஆங்கோர் ஓரமாய்
ஆணும் பெண்ணும்
போகிற வழியிலே விழுந்து கிடந்தாங்க...
குடிதண்ணிக் (மதுபானக்) கடை
பொங்கலுக்குப் பூட்டென்று
முதல்நாளே
மூக்குமுட்டக் குடித்ததன் விளைவாம்!
அங்காடி முன்னே
கையேந்துவோரைக் (பிச்சைக்காரரைக்) காணவில்லை
நாளைக்குப் பொங்கல் என்பதால்
பொங்கின பொங்கலை விட
தண்டின பொங்கல் நிறையுமென்றோ
வீட்டுக்கு வருகை தர
ஓய்வு எடுக்கிறார்கள் போலும்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.