Saturday 18 January 2014

சாவடைந்தவர்களின் உயிரை மீட்டுத் தருவீர்களா?


முகநூலில்(facebook) இல் பார்த்த அலைவரிசை(channel)-4, 2011இல்  வெளியிட்ட ஓளி, ஒலி (Video) பட இணைப்பை பார்வையிடுவதற்காக - இங்கு
இணைப்புச் செய்து கருத்துப்பகிர்கிறேன்!
http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/
(Sri Lanka's Killing Fields)
http://www.youtube.com/watch?v=Rz_eCLcp1Mc&feature=youtu.be
(Sri Lanka's Killing Fields by Channel 4 [Full video])

நாளுக்கு நாள் அறிவியலில்
ஆளுக்கொரு கண்டுபிடிப்பாக
எத்தனையோ கோடிக்கணக்கில
கண்டுபிடித்து இருந்தாலும்
சாவடைந்தவர்களின்
உயிரை மீட்டுத் தரவோ
மனிதன் சாகாமலிருக்கவோ
அறிவியலாளர்கள்
எதனையும் கண்டு பிடிக்கவில்லையே!
ஆன்மீகவாதிகள் கூறும்
கடவுள் கூட
பெண்களை வன்முறையாகக் கெடுக்கின்ற
ஆண்களின் ஆணுறுப்புகளை
புளுப்பிடித்து அழுகச்செய்து
ஒறுப்பை(தண்டனையை) வழங்கியதுமில்லையே!
அறிவியலாளர்களும் கடவுளும்
தமிழினத்தைத் திரும்பிப் பார்க்காத வேளை
அலைவரிசை(channel)-4
இலங்கைக்குள் எப்படியோ ஊடுருவி
போரில் தமிழரின் இழிவுநிலையை
ஓளி, ஒலி நாடாவில் பதிந்து
அறிவியலாளர்களும் கடவுளும்
நம்பும்படி செய்துள்ளமையை
பாராட்டித் தான் ஆகவேண்டும்!
அலைவரிசை(channel)-4 கூறும்
போரில் பாதிப்புற்ற ஒருவரென்பதால்
இலங்கைத் தமிழர் பட்ட
துன்பங்களின் சுருங்கிய தொகுப்பே
அலைவரிசை(channel)-4, 2011 இல் வெளியிட்ட
ஓளி, ஒலி நாடாவின் கருப்பொருளாகும்!
உங்கள் காலில் விழுந்து
மன்றாடிக் கேட்கின்றேன்
இக்காட்சிகளைப் பார்த்து
எவரும்
தற்கொலை செய்துவிடாதீர்கள்...
இக்காட்சிகளில் வரும்
குற்றவாளிகளுக்கு
ஒறுப்பை(தண்டனையை) வழங்க
உலக நாடுகளை
அணிதிரட்ட முன்வாருங்கள்...
"சாவடைந்தவர்களின் உயிரை
மீட்டுத் தருவீர்களா?" என்று கேட்கின்ற
இலங்கையருக்கு
அலைவரிசை (channel)-4, 2011 இல் வெளியிட்ட
ஓளி, ஒலி நாடாவை
துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தியே
தமிழர் செய்ய வேண்டிய
கடமை இவையே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.