Sunday 1 December 2013

ஐயோ! என்னை மன்னிக்கவும்!


இலக்குவன் தன் வீட்டு வாசலடியில் நாளேடு படிக்கையில் தரகர் ஒருவர் வந்தார். இலக்குவனுக்கென்ன நல்ல உழைப்பு, நல்ல வருவாய், பிழைப்புக்குக் குறைவில்லை.

தரகர் : என்ன காணும் உங்கள் (ஜாதகக்) குறிப்பைத் தாருங்கோவேன்... நல்ல வசதியான இடமொன்று வந்திருக்கு. விட்டால் பறந்து போய்விடும்.

இலக்குவன் : கண்ணகியோ சீதையோ இஞ்ச வாங்கோவேன்...

கண்ணகியும் சீதையும் : என்னங்க இப்படி வேகமாய் கூப்பிடுறியள்...

இலக்குவன் : நல்ல இடமாம்... விட்டால் பறந்திடுமாம் என்று என்ர குறிப்பையெல்லோ தரகர் கேட்கிறாருங்கோ...

கண்ணகியும் சீதையும் : பெரியவரே கொஞ்சம் எழும்பும் காணும்!

தரகர் : என்னங்க உடனேயே எழும்பச் சொல்லிப்போட்டீங்க...

கண்ணகியும் சீதையும் : முன்னைப் பின்னை ஊருக்குள்ளே இவரைப்பற்றி அறிஞ்சனீரே?

தரகர் : ஆளுக்கென்ன குறை... மாதம் அறுபது ஆயிரங்கள் உழைக்கிறாராம்... வெற்றிலைப் பாக்கு, புகையிலை, குடிவெறி, காதல், கள்ளப் பெண்டிர் ஏதுமில்லாத் தங்கக்கட்டி!

கண்ணகியும் சீதையும் : எங்களைப் பற்றி அறிஞ்சீரோ?

தரகர் : எனக்குத் தெரியாமல் போச்சே... நீங்க யாருங்க...

கண்ணகியும் சீதையும் : உங்கட தங்கக்கட்டியைக் கேட்டிருக்கலாமே...

தரகர் : அதைத் தான் பிள்ளையள், நானும் மறந்திட்டேன்!

கண்ணகியும் சீதையும் : இனியாவது நினவில வைச்சிருங்கோ... நாங்க தான் இந்தத் தங்கக்கட்டியின்ர இரண்டு பெண்டாட்டிகள்... இவருக்கு மூன்றாம் பெண்டாட்டி வேணாமுங்க...

தரகர் : ஐயோ! என்னை மன்னிக்கவும்! இனிமேல் இந்தப் பக்கம் தலை காட்ட மாட்டேனுங்க...

"உதுக்குத் தான் பாருங்கோ, ஆளமறிந்து காலை வைக்கவேணும்" என்று சொல்லியபடி குதிக்கால் பிடரியில் பட தரகர் ஓட்டம் பிடிக்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.