Friday 20 December 2013

கத்திரியை விரட்ட

2011 சித்திரை உச்சந் தலை பிளக்கும் வெயில் காலத்தில நான் சென்னைக்குப் போயிருந்தேன். அப்பதான் ஈழத்தில 'காண்டாவனம்' என்று சொல்லப்படும் கடும் வெயிலை; இந்தியாவில, தமிழ்நாட்டில 'கத்திரி' வெயில் என்கிறாங்க என்று படித்தேன். உடனே இப்படி ஒரு காட்சி உரையாடலை எழுதினேன்.

வகுப்பறையில:
ஆசிரியர் : கத்திரியை விரட்ட என்ன செய்யலாம் பிள்ளைகளே?

மாணவன் : சென்னை, கே.கே.நகர், முனுசாமி சாலை இருபக்கத்திலும் உள்ளது போல நிழல் தரும் மரங்களை நாட்டப் போராட வேண்டும்.

ஆசிரியர் : நாடெங்கிலுமா?

மாணவன் : உலகெங்கிலுமையா

தெருவெளியில:
மாணவி : 'கத்திரி' வெயில் என்கிறாங்க... தலையை பிளக்கும் வெயில் என்கிறாங்க... ஆனால், ஆண்கள் தான் அதிகம் தெருவில உலாவுறாங்களே...

மாணவன் : ஆண்களின் பார்வைக்கு மட்டும் பெண்களின் கண்களில் குளிர்மை தெரியுமாம். பெண்களைப் பார்த்தாலே 'கத்திரி' வெயில் சுடாதாம்.

மாணவி : 'கத்திரி' வெயில் சுடாதாமா? தெருவால போறதை மறந்து பெண்களைப் பார்த்து அடிபட்டுச் சாவது ஆண்களே!

உண்மையில, இப்படி நாடகம் போட்டுக் 'கத்திரி' வெயிலை விரட்ட முடியாதுங்க... முடிந்தால் மரநடுகை இயக்கம் தொடங்கலாமுங்க...

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.