Friday 20 December 2013

அரசே கேள் - 01

அம்மாவின் வயிற்றை உதைத்து உதைத்து
ஒருவாறு
அம்மா பிறந்த மண்ணில் தவழ்ந்தேன்!
அன்பு எனும் தேன் கலந்து
அறிவு எனும் செந்நீர் கலந்து
பாலூட்டி வளர்த்த
அம்மாவின் கைகளை உதறித் தள்ளி
நடக்கத் தொடங்கியதும்
ஒழுக்கம் எனும் பாடம் புகட்டி
கைக்குள் அணைத்து அன்பு காட்டி
அப்பாவும் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்!
அந்தப் பள்ளி, இந்தப் பள்ளி, எந்தப் பள்ளி
எதுவானாலும்
ஆசிரியர்கள் ஊட்டிய அறிவை
நாள்தோறும் மீட்டு மீட்டு
தேர்வு எழுதிச் சித்தியும் அடைந்தாச்சு!
சான்றிதழ்க் கட்டும் கையுமாக
நாடெங்கும் நடைபோட்டும்
வேலை எதுவும் கைக்கு எட்டவில்லையே!
ஓ! அரசே!
வேலையில்லாதோர் நாட்டில் மலிந்தால்
எப்படி
ஆட்சி நடாத்தப் போகின்றாய்?!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.