Friday 9 August 2013

நேற்று, இன்று, நாளை

நான் காணும்
நம்மாளுகளின் வாழ்க்கையில்
முன் நிகழ்வு, பக்க விளைவு, பின் விளைவு
எல்லாம் ஏனென்று எண்ணிப்பார்த்தேன்!
நேற்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
இன்று மீள முடியாமல்
துயருறுகிறான்!
நேற்றே
இன்றை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிகாலை எழுந்ததும்
என்ன செய்வதென்று தெரியாமல் முளிசுகிறான்!
இன்றே
நாளையை மட்டும் கணக்கில் எடுத்தவன்
விடிய விடிய
நன்றே முன்னேறினாலும்
முழுமையான மகிழ்வைத் தேடுகிறான்!
நேற்றைய படிப்பையும்
இன்றைய தேவையையும்
நாளைய இருப்பையும்
என்றும் கணக்கில் எடுத்தவன்
வெற்றியோடு மகிழ்வாய்
இருப்பதைக் காண்கின்றேன்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.