Friday 9 August 2013

தமிழனுக்கு முடிவோ விடிவோ எப்போது?

ஈழத் தமிழர் நிலைய
கொஞ்சம் பாருங்களேன்...
48 ஆண்டுகளுக்கு மேலாக
விடுதலைக்காகப் போராடியும்
தோல்வியைத் தழுவுவதற்கு இடையில்
உலகெங்கும் 48 நாடுகள்
விடுதலை அடைந்துவிட்டன...
அன்று 48 போராளிக்குழுக்கள்
இன்று 48 அரசியல் குழுக்கள்
தலைமைக்கும் பதவிக்கும் மோதிக்கொள்ள
வசதியுள்ளவர் எல்லோரும்
வெளிநாடுகளுக்குப் பறந்தோட
எஞ்சிய கொஞ்சமும்
ஈழத்தில் சாவது தொடர
ஈழமே சிங்கள நாடாகிறது...
இப்படியே போனால்
ஈழத்தில்
தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லையே!
வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு
ஓர் எட்டப்பன் போல
பண்டாரவன்னியனுக்கு
ஓர் காக்கைவன்னியன் போல
தலைவர் கரிகாலனுக்கு(வே.பிரபாகரன்)
ஓர் கருணா அம்மான்(வி.முரளீதரன்) போல
எத்தனையோ ஒற்றர்கள் இருப்பதால் தான்
தமிழர் அழிவதே முடிவாயிற்று!
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
தமிழர் உணர்ந்தால்
ஒரே தலைமை ஒரே கோட்பாடென
ஓரணியில் திரண்டால்
தமிழனுக்கு விடிவு கிட்டலாம்!
உலகின் எந்த மூலையிலும்
வாழும் தமிழரே
ஈழத்தில்
தமிழர் அற்றுப் போனாலும்
உங்கள் நாடுகளிலாவது
தமிழர் அழியாமல் பேண
ஓரணியில் இணையுமாறு
2008, 2009 ஈழப் போரில்
பாதிப்புற்றவர் கெஞ்சுகின்றனர்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.