Friday 21 June 2013

பொய்யான காதலர் நாள்

இளையவர்களைப் படையில் சேர்ப்பதைத் தடுக்கவே, 'வலன்ரைன்' என்னும் கத்தோலிக்க மதகுரு இளம் இணையர்களுக்கு மணமுடித்து வைத்துள்ளார். இதனாலேயே அவரைச் சிறையில் அடைத்தனர். சாகும் வரை அவருக்குச் சிறை வாழ்க்கை தான்...

அவர் சிறையில் சாவடைந்த நாளே FEB 14. இந்நாள் உலகிற்கு நல்லதைச் செய்தவரை நினைவூட்டும் துக்க நாளே! இந்நாளைக் "காதலர் நாள்" என்று ஏற்க முடியாதே! அப்படியானால், இந்நாள் பொய்யான காதலர் நாளே!

மதகுரு எப்படிக் காதலித்திருப்பார்? சிறைக்குப் போய் மதகுருவுக்கு உணவு கொடுத்த பெண் மதகுருவைக் காதலித்திருப்பாரா? இந்தக் காதலை எப்படி நம்புவது? காதலுக்கு எந்த வித தொடர்பும் இல்லாத FEB 14 ஐ திருமண நாளென்று கூறலாமே!

இது வரலாறு சுட்டும் உண்மையாதலால், காதலர்களே என் மீது சீறிப் பாய வேண்டாம். மாற்றுக் கருத்து இருப்பின் நீங்களும் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.