Wednesday 15 May 2013

பொய்


பெண்ணின் உள்ளத்தில்
என்ன இருக்கிறது என்று
அறிய முடியாது என்பது
பொய்!
ஆணுக்கும் அப்படியே!
ஆளுக்கொரு உள்ளம் -  அதில்
ஆயிரம் எண்ணங்கள் -  அதை
அறிய முயலும்
காளைகளே... வாலைகளே...
அன்பைக் கொடுங்கள்
நம்பிக்கை வையுங்கள்
விருப்பங்களுக்கு உடன்படுங்கள்
பிறகென்ன
பிறரது உள்ளத்தை அறிய
வேறேதும் கருவிகள் வேண்டுமோ?
ஆளுக்காள் -  தங்கள்
உள்ளங்களை அறிந்தால்
காதல் தானே!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.