Friday 12 April 2013

பாடல் பற்றி...


எதுகை, மோனை முட்டி மோதிய
பாடல்கள் இல்லையே
டம், டும், டாம் என மோதும்
பாடல்கள் இருக்கையில்
நான் எதைப் பாட?
பின்னிசை இருக்கச் சீர்காழி பாட
நான்
பா புனைய வேண்டும் என
நினைத்தாலும் கூட
பா வர மறுக்கிறதே!
முயன்றேன்...
வண்டிலால கல்லுப் பறிப்பது போல
இன்றைய இசை இருக்க
"முல்லா வீசிய கல்லா
நல்லா பேசிய பல்லா" என
எழுதினாலும் பாடலாக இல்லையே!
அன்பானவர்களே!
"இசைக்குப் பாடலா
பாடலுக்கு இசையா"
கொஞ்சம் சொல்லித் தாருங்களேன்!

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.